Sri Lankan Educational Reform - 1972 (Tamil)

 1972ம் ஆண்டு கல்விச் சீர்திருத்தம்

1970 ஆம் ஆண்டைத் தொடர்ந்து ஏற்பட்ட இளைஞர் கொந்தளிப்பும் படித்த இளைஞர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியமையும் 1972ஆம் ஆண்டு கல்விச்சீர்திருத்த வருகையின் பிரதான காரணமாகும். இலங்கை எதிர்கொண்ட சென்மதி நிலுவை நெருக்கடி கல்வியிலே தொடர்ந்து கொண்டிருக்கும் குடியேற்றவாத எச்சங்கள் தொடர்பான எதிர் மனப்பாங்கு மற்றும் க.பொ.த உயர்தரத தேர்வில் சித்தியடைவோர் அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்கப்பெறமுடியாத நிலை, பாடசாலைக் கலைத்திட்டம் முற்றிலும் ஏட்டுக்கல்விமயப்பட்டதாக இருந்தமை, தொழில்மையக்கல்விக்கு மாணவர் மத்தியில் ஏற்பட்ட நேர் மனப்பாங்கு, நாட்டின் புவியியல் வளங்களை மேம்படுத்துவதற்கு கல்வியைப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனை என்பன 1972ஆம் ஆண்டு கல்வியில் ஒரு சீர்திருத்தத்தை வேண்டி நின்றது.

1972 ஆம் ஆண்டு கல்விச்சீர்திருத்த மாற்றங்கள் ஏற்பட்ட பகுதிகள்

  • பாடசாலைக் கட்டமைப்பு 
  • கல்வி நிர்வாகம்
  • பாடசாலை கலைத்திட்டம் 
  • ஆசிரியர் கல்வி
பாடசாலைக் கட்டமைப்பு மாற்றங்கள்

    • பாடசாலை கட்டமைப்பானது மூன்று பிரதான பிரிவுகளை உள்ளடக்கியது.
        • ஆரம்பக்கல்வி (தரம் 01 – தரம் 05)
        • கனிஷ்ட இடைநிலைக்கல்வி (தரம் 06 – தரம் 09)
        • சிரேஷ்ட இடைநிலைக்கல்வி (தரம் 10, 11)

    • 11 வருடங்கள் பாடசாலைக் கல்வி
    • பாடசாலை அனுமதி வயது 6 ஆக உயர்த்தப்பட்டது
    • கட்டாய பாடசாலைக் கல்வி பயிலும் காலம். 14 வயதாக காணப்பட்டது
    • கனிஷ்ட இடைநிலைக் கல்வி முடிவடைந்ததும் மாணவர்கள் தேசிய பொதுக்கல்விச் சான்றிதழ் (தே.பொ.க.சா) (NCGE) பரீட்சை எழுதுவர்.
    • இப்பரீட்சைக்கு இரு முறை மட்டுமே தோற்ற முடியும். 1975ஆம் ஆண்டு முதன் முதலாக இப்பரீட்சை நடத்தப்பட்டது.

    • தே.பொ.க.சா பரீட்சையில் பெறும் அடைவுகளுக்கமைய கலைப்பாடத் துறை, விஞ்ஞான பாடத்துறை, வணிகத்துறை, சமூகக்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளைத் தெரிவு செய்து சிரேஷ்ட இடைநிலைக் கல்வியின் இறுதியில் மாணவர் தேசிய உயர்கல்விச் சான்றிதழ் (தே.உ.க.சா) (HNCE) பரீட்சைக்குத் தோற்றுவர்.
    கலைத்திட்ட மாற்றங்கள் 

    1972 ஆம் ஆண்டு கலைத்திட்ட மாற்றங்கள் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது

    • மைய பாடங்கள்
    • விருப்பத்துக்குரிய பாடங்கள்
    • செயற்திட்ட வேலை

    மையப் பாடங்கள்
    முதல் மொழி, இரண்டாம் மொழி,புள்ளிவிபரவியல், முகாமைத்துவ அடிப்படைக் கோட்பாடு,எமது கலாச்சார மரபுரிமையும் சமூக பொருளாதார சுற்றாடலும் அடிப்படை சமூக விஞ்ஞான கோட்பாடுகளும் உள்ளடங்கப்படுகிறது.

    விருப்பத்துக்குரியபாடங்கள்
    விஞ்ஞானப்பாடத்துறை. வணிகத்துறை. சமூக விஞ்ஞானம், மானிடவியல் மொழிப்பாடம், அழகியல் போன்றன உள்ளடங்கப்படுகிறது.

    செயற்திட்ட வேலை
    பாடசாலைச்சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றினை தீர்ப்பதற்குரிய விரும்பத்தக்க சமூக மனப்பாங்குகள்,தொழில் மனப்பாங்குகள்,சமூக நோக்குத்திறன் செயற்திட்டங்களில் ஈடுபடல் என்பவற்றினை இணைத்து அறிக்கை சமர்ப்பிக்கும் முறையே செயற்திட்ட வேலை ஆகும். ஆனால் இது அரச மாற்றம் நிகழுதலின் முன்னர் கனிஸ்ட இடைநிலைக் கலைத்திட்டத்தில் மட்டுமே அமுலானது.

    1972 கலைத்திட்ட சீர்திருத்தமானது தொடக்க நிலை கல்வி மட்டத்தில் தரம்(1-5) தனிப்பாடக் கலைத்திட்டத்திட்கு பதிலாக ஒருங்கிணைந்த பாடக் கலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதேவேளை கனிஸ்ட இடைநிலைப் பாடசாலைக் கலைத்திட்டத்தில் தரம்(6-9) கட்டாயப் பாடங்கள் 10 இடம் பெற்றன.அவை பின்வருவன

    1. முதல் மொழி (கல்வி பயிற்று மொழி)
    2. இரண்டாம் மொழி (ஆங்கிலம்ஃசிங்களம்ஃதழிழ்)
    3. சமயம்
    4. சுகாதாரமும் உடற்கல்வியும்
    5. ஒருங்கிணைந்த விஞ்ஞானம்
    6. கணிதம்
    7. சமூக அறிவியல்
    8. நுண் கலைப்பாடம்
    9. தொழில் முன்னிலைப்பாடம்-1
    10. தொழில் முன்னிலைப்பாடம்-11

    இவ் இடைநிலைப் பாடசாலைக் கலைத்திட்டத்திலே குறிப்பிடத்தக்க புதிய அம்சங்கள் இடம் பெற்றன. அவற்றில் தொழில் முன்னிலைப் பாடம் அன்றாட வாழ்க்கைகக்கு தோவையான பல்வேறு திறன்களை விருத்தி செய்தது. எனினும் அறிமுகம் செய்யப்பட்ட போது பல பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டன. ஏனெனில் இப்பாடத்தினைப் போதிப்பதற்குரிய மூலவளங்கள் இந்நாட்டில் எல்லாப் பாடசாலைகளிலும் போதிய அளவில் இருக்கவில்லை. தொழில் முன்னிலைப் பாடம் 11 அந்தந்த பிரதேசத்துக்குரிய வளங்களையும் இணங்கண்டு தொழில்களை கற்பிக்கும் முயற்சியே இதுவாகும்.  உதாரணம்- மீன்பிடிப்பு, ஓடு தயாரிப்பு, சுண்ணாம்பு உற்பத்தி.

    ஆசிரியர் கல்வி

    1972 ஆம் ஆண்டிற்கு முன்னர் பெருந்தொகையான ஆசிரியர்கள் பயிற்சி எதுவும் இன்றி நியமிக்கப்படட்னர். எனவே இதனால் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின ; தேவை ஏற்பட்டது. 1972ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கு தபால் மூல பயிற்சித்திட்டம் தொடங்கப்பட்டது. அறிமுகப்படதத்ப்பட்ட கலைத்திட்ட சீர்திருத்தத்திற்கு பொருத்தமான ஆசிரியர்கள் உருவாக்கப்படவில்லை. எனவே மீள் பயிற்சி அளிக்கும் தேவை காரணமாக பிரதேச மட்டத்தில் பயிற்சித்திட்டங்களும் புத்தாக்க கற்கை நெறிகளும் தொடங்கப்பட்டன. கலைத்திட்டத்தில் தொழில்சார் பாடங்களை அறிமுகம் செய்தமையால் கல்வி உலகை வேலை உலகுடன் ஒன்றிணைப்பதற்கும் தொழில்சார் புலக்காட்சியை மாணவரிடத்து மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

    சிறந்த எண்ணக்கரு விநியோகம் எனும் அடிப்படையில் தொடக்க நிலை வகுப்புகளும் இடைநிலை வகுப்புகளும் உரிய கலைத்திட்டத்தில் மாற்றம் செய்ய மேற்கொண்ட முயற்சியின் விளைவே 1972ஆம் ஆண்டு கலைத்திட்ட சீர்திருத்தம் ஆகும். 1972ஆம் ஆண்டு கலைத்திட்ட சீர்திருத்தமானது கல்வி அமைப்பிலுள்ள 9000க்கு மேற்பட்ட பாடசாலைகளில் இம் மாற்றங்களை அமுல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களுக்கு அவை தொடர்பான அறிவூட்டல் பயிற்சி என்பன போதியளவில் வழங்கப்படாமலே அக்கலைத்திட்டச் சீர்திருத்தங்கள் செயற்படுத்தப்பட்டன. எனவே முதன்மை ஆசிரியர்கள் என்பவர்களைப் பயன்படுத்திப் புதிய பாடத்துறைகளில் சேவைக்காலப் பயிற்சி அமர்வுகள் போன்ற துரித நிகழ்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற நேரிட்டது. இவ்வாறான பல விடயங்களை 1972ஆம் ஆண்டு கலைத்திட்ட சீர்திருத்தமானது கொண்டமைந்தது.


    Comments

    Popular posts from this blog

    Trends of Curriculum Development (Tamil)

    Student Centered Teaching (Tamil)

    Sociological Bases of Curriculum (Tamil)

    Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

    Selection of Curriculum Content (Tamil)