Curriculum Changes of Sri Lanka at Colonial period (Tamil)

 காலனித்துவ ஆட்சியில் ஏற்பட்ட கலைத்திட்டத்தில் மாற்றங்கள்

இலங்கையின் கலைத்திட்டமானது படிப்படியாக விருத்தியடைந்த ஒரு முறைமையாகும். குறிப்பாக போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய 3 இனத்தவர்களால் இந்நாடானது காலனித்துவ ஆட்சியின் கீழ் உட்பட்டு இருந்தமை நாம் அனைவரும் அறிந்தவொன்றே. அந்தவகையில் நோக்கும்போது இந்நாட்டினுடைய பாரம்பரிய கலைத்திட்டத்தில் மேலைத்தேய நாட்டவரின் செல்வாக்கை எங்களால் இன்று வரைக்கும் அடையாளம் காணமுடியும். அந்தவகையில் காலனித்துவ ஆட்சியில் இலங்கையின் கலைத்திட்ட விருத்தியில் ஏற்பட்ட மாற்றங்களை நோக்குவோம்.

போர்த்துக்கேயர் காலக்கல்வி 

இலங்கையை ஆட்சி செய்த முதல் ஐரோப்பிய இனத்தவராக போர்த்துக்கேயர் அடையாளப்படுத்தப்படுகின்றனர். கி.பி 1505ம் ஆண்டு வருகையைத் தொடர்ந்து சுமார் 1 ½ நூற்றாண்டுகளாக போர்த்துக்கேய ஆட்சி தொடர்ந்தது. குறிப்பாக கரையோரப் பிரதேசங்களிலேயே இவர்களுடைய செல்வாக்கும் நிலைத்திருந்தது. பொதுவாகக் கூறினால் இவர்களது வருகையின் பிற்பாடே இலங்கையின் கல்விக் கட்டமைப்பானது நிறுவனமயப்படுத்தப்பட்டதாக மாறியது. குறிப்பாக வர்த்தகம், மதத்தைப் பரப்புதல் போன்ற அம்சங்களை நோக்கங்களாகக் கொண்டு வந்திருப்பினும் அதை நிறைவேற்றிக்கொள்ள கல்வியையே ஆயுதமாக இவர்கள் பயன்படுத்தினர். அந்தவகையில் போர்த்துக்கேய ஆட்சியில் ஏற்பட்ட கலைத்திட்ட மாற்றங்களை நோக்குவோம். 

போர்த்துக்கேயர் காலக் கலைத்திட்ட மாற்றங்கள் 

குறிப்பாக போர்த்துக்கேயர் காலத்தில் சமயத்தைப் பரப்பும் அடிப்படை நோக்கத்தைக்கொண்டு மிஷனரியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வி முறையைக் காணக்கூடியதாக இருந்தது. போர்த்துக்கேயர் கால சமயக்குழுக்கள் பின்வருமாறு, 

பிரான்ஸிஸ்கன ; சமயக்குழு - 1543ம் ஆண்டு 

ஜெசுயிட் சமயக்குழு - 1562ம் ஆண்டு 

டொமினிக்கன் சமயக்குழு -1602ம் ஆண்டு 

ஒகஸ்டியன் சமயக்குழு -1606ம் ஆண்டு 

போர்த்துக்கேயர் காலக்கல்வி நிறுவனங்களாக பரிஸ் பாடசாலை( கோயிற் பாடசாலை), ஆரம்ப பாடசாலை, கல்லூரிகள், ஜேசுயிட்ஸ் கல்லூரிகள் என்பவற்றைக் குறிப்பிடலாம். 

பரிஷ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு அடிப்படைக்கல்வியும், சமயக்கல்வியும் போதிக்கப்படட்டன. 

குறிப்பாக கத்தோலிக்க மதத்தைப் பரப்புதலே கலைத்திட்டத்தில் முக்கிய அங்கமாகக் காணப்பட்டது. (சமயப் பாடங்கள்) இதற்காக வாசிப்பு, எழுத்து போதனை போன்ற அம்சங்கள் இணைக்கப்பட்டன. அது போலவே கல்வியைப் போதிக்கும் பணியை கிறிஸ்தவ திருச்சபை மதப்பிரசாரகர்களிடையே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 

கற்பித்தல் முறைகளாக வினா விடை முறை, மனனம் செய்யும் முறை, பாடல் பாடுவது, நாடக முறை போன்றன காணப்பட்டன. 

அரபு, கிரேக்கம், லத்தீன் போன்ற மொழிகளில் ஆரம்ப பாடசாலைகளில் வேறுபட்ட மொழிகளைக் கற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படடிருந்தன. 

தர்க்க சாஸ்திரம், பேச்சு வாண்மை என்பனவும் பாட உள்ளடக்கங்களாகக் காணப்பட்டன. இக்கால கல்வி குறுகிய பாடத்திட்டம், முறையான கல்விக்கொள்கை இன்மை, சமய சார்பு, வாழ்க்கைக்கான கல்வியின்மை மேலும் கல்வியை அரசு பொறுப்பு எடுக்காமை போன்ற குறைபாடுகளைக் கொண்டிருந்தது.ஆகவே, போர்த்துக்கேயர் காலத்தில் கலைத்திட்ட மாற்றங்கள் பெரிதளவில் இடம்பெறவில்லை என்பதைக் குறிப்பிட முடியும்.

ஒல்லாந்தர் காலக் கல்வி 

இலங்கையை போரத்துக்கேயருக்கு அடுத்ததாக ஆட்சி செய்த இனத்தவராக ஒல்லாந்தர் விளங்கினர். அதாவது ஒல்லாந்தர் (1658-1796) காலப்பகுதியில் ஆட்சி செய்தனர். அதாவது ஒல்லாந்தர்கால கல்விக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இவர்களும் வர்த்தக நோக்கம் மற்றும் மதத்தினைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டதுடன் அதை நிறைவேற்றிக் கொள்ள கல்வியைக் கருவியாகப் பயன்படுத்தினர். ஓல்லாந்தர் கால ஆட்சியல் கலைத்திட்ட மாற்றங்கள் ஏற்பட்டது என்றால் மிகையாகாது. 


அந்த வகையில் ஒல்லாந்தர் கால கலைத்திட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. ஓல்லாந்தர் கால கலைத்திட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் ஓல்லாந்தர் கால கலைத்திட்டமானது அவர்களது கல்வித்துறை அணுகுமுறையானது நல்ல அமைப்பு கொண்ட அமைப்பு கொண்டதாக அமைந்திருந்தது. அவர்களது கலைத்திட்ட அமைப்பு புரட்டஸ்தாந்து சமயத்தினை சார்ந்ததாக அமைந்திருந்தது. அதாவது இவர்கள் முறையான கல்வி நிருவாகக் கட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்தினார்கள். ஓல்லாந்தர் புரட்டஸ்தாந்து சமயத்தினைத் தழுவியவர்களுக்கு எழுத்து தொடர்பான ஆரம்பக் கல்வியையும் வழங்கினார்கள். 

மேலும் போர்த்துக்கேயர் கல்வியை வழங்கும் பொறுப்பு அரசிடம் காணப்படவில்லை. ஆனல் ஒல்லாந்தர் கல்வியை வழங்கும் பொறுப்பினை அரசிடம் ஒப்படைத்தார்கள். எனவே இவர்களின் கலைத்திட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அதாவது மொழியானது மதத்தோடு தொடர்புபட்ட கலைத்திட்டமாகக் காணப்பட்டது. ஒல்லாந்தர்கால கலைத்திட்டத்தில் கல்வியின் நோக்கங்கள் பல காணப்பட்டது. 

அந்த வகையில், புரட்டஸ்தாந்து சமயத்தினைத் தழுவியோருக்கு எழுத்து, வாசிப்பு மற்றும் ஆரம்பக் கல்வியை வழங்குதல். சமயப் பிரசாரத்துக்குத் தேவையான சமய பிரசாரகர்களையும், ஆசிரியர்களையும் சுயமொழியில் பயிற்றுவித்தல். சமயப் பிரசாரத்துக்குத் தேவையான சமயப்பிரசாரகர்களையும், ஆசிரியர்களையும் சுயமொழியில் பயிற்றுவித்தல். மேலும் ஒல்லாந்தர் காலக் கலைத்திட்டத்தில் பல அம்சங்கள் முக்கியம் பெற்று காணப்பட்டன. அதாவது கட்டாயக் கல்வி என்ற அம்சத்தை நடைமுறைப்படுத்தினார்கள். 

கலைத்திட்ட உள்ளடக்கங்களில் புரட்டஸ்தாந்து சமயம் பிரதான இடத்தினைப் பெற்று இருந்த நிலையில் கட்டாயக் கல்வி முறை ஊடாக புரட்டஸ்தாந்து சமயத்தினை கலைத்திட்டத்தில் புகுத்தி கட்டாயமாக அதனை கற்க வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. கலைத்திட்டத்தில் மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். 

அதாவது பாடசாலைகளை ஒரு முறையான கலைத்திட்டத்தில் கொண்டு வருவதற்காக ஸ்கொலகல் கமிசன் என்ற கட்டமைப்பு அமைப்பினை உருவாக்கினார்கள். இதன் மூலம் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது எனலாம். இதன் மூலம் மாணவர்களின் பாடஅறிவு தொடர்பாகவும் மேலும் வாசிப்புத் திறன் எழுத்தறிவு சமய அறிவு தொடர்பாக பரிசீலிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர்களின் வேலைகளும் பரிசீலிக்கப்பட்டது. 

இலங்கையில் ஒல்லாந்தர்கால பாடசாலை முறைகளில் கலைத்திட்ட மாற்றங்களும் காணப்பட்டது. அதாவது ஒல்லாந்தர் காலப் பாடசாலைகளாக செமினரி பாடசாலை, நோமல் பாடசாலை, தனியார் பாடசாலை, விஸ்மிகர் பாடசாலை என காணப்பட்டது. ஓல்லாந்தர்கால கலைத்திட்டமானது ஆரம்பத்தில் எழுத்து ,வாசிப்பு, சமயம் போன்றவற்றை உள்ளடக்கிதாக கலைத்திட்ட உள்ளடக்கம் காணப்பட்டது. பொதுவாக கோயில்பற்றுப் பாடசாலைகளே ஆரம்பக் கல்வியை வழங்குவதாக இருந்தது. செமினரிப் பாடசாலைகளின் கலைத்திட்டத்தை நோக்கும் போது செமினரியில் பாடத்திட்டமானது முழுமையாக மேற்கத்தைய பாடத்திட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. உயர் வகுப்புக்கள் அனைத்தும் ஒல்லாந்த மொழியில் தான் நடத்தப்பட்டன. செமினரியன் கீழ் வகுப்புக்களில் ஒல்லாந்து மொழி ,இலக்கணம,; மொழி பெயர்ப்பு போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அத்துடன் நோமல் பாடசாலைகளில் சற்று வேறுபட்டு இருந்தது. அதாவது ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களாக வருபவர்களுக்குமான கல்வித் திட்டங்களை கொண்டு காணப்பட்டது. மேலும் ஆசிரியர் பயிற்சிக் கற்கை நெறிகள் கலைத்திட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் ஆசிரியர்களுக்கு வாய்புக்கள் வழங்கப்பட்டது எனலாம். 

விஸ்மிகர்  பாடசாலைகளில் கலைத்திட்ட உள்ளடக்கங்களை நோக்கும் போது எண் ,எழுத்து வாசிப்பு, எண்கணிதம், புரட்டஸ்தாந்து சமயம் போன்றன உள்ளடக்கப்பட்டு அவை ஆண், பெண் இருபாலாருக்கும் கற்பிக்கப்பட்டன. இதன் மூலமாக அவர்கள் உரிய வயதினை அடைந்ததும் பொருத்தமான பல்வேறு தொழில்களுக்கான பயிற்சியினைப் பெறக் கூடியதாக அமைந்தது. உதாரணமாக பெண்களுக்கு தையல், பின்னல் , வீட்டுப்பணி கற்றுக் கொடுக்கப்பட்டது. 

தனியார் பாடசாலைகளில் ஜரோப்பிய மொழியிலேயே கலைத்திட்ட உள்ளடக்கங்கள் அமைந்து இருந்தன. மேலும் அது போதனா மொழியாகவும் காணப்பட்டது. இங்கு எழுத்து, வாசிப்பு, எண் கணிதம் ,புவியியல,; சங்கீதம் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. எனவே இலங்கையில் காலனித்துவ கால ஒல்லாந்தர் காலத்தில் கலைத்திட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது எனலாம். கலைத்திட்ட உள்ளடக்கங்களில் பாடவிதானத்தில் மாற்றங்கள் காணப்பட்டது. 

ஆரம்பக் கல்வியைப் போதித்த பாடசாலைகளில் பாட உள்ளடக்கங்களில் சுதேச பாட உள்ளடக்கங்கள் இருந்தன. கோயில்பற்றுப் பாடசாலை பாடவிதானத்தில் சிங்களம் ,தமிழ,; எழுத்து, வாசிப்பு, புரட்டஸ்தாந்து சமயக் கோட்பாடுகள் என்ற பாடங்கள் உள்ளடங்கி இருந்தன.

செமினரி பாடசாலைகளில் கீழ்பிரிவில் கிறிஸ்தவ சமயம் ,ஒல்லாந்து மொழி ,இலக்கணம் கிரேக்கம் ,ஹிப்ரு போன்றவற்றுடன் மொழி பெயர்ப்பும் ஒரு பாடமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. 

மேல் வகுப்புக்களில் இலத்தீன் , கிறிஸ்தவ சமயம் கற்பிக்கப்பட்டது. மேலும் கலைத்திட்டத்தில் பால்நிலை சார்ந்த விடயங்களும் உள்ளடக்கப்பட்டு இருந்தது. இவ்வாறான பல நடவடிக்கைகள் மூலமாக கல்வி கலைத்திட்டத்தில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பிரித்தானியர் காலக் கல்வி 

இலங்கையை ஒல்லாந்தருக்குருக்கு அடுத்த்தாக ஆட்சி செய்த இனத்தவராக பிரித்தானியர் விளங்கினர். அதாவது பிரித்தானியர் (1798-1931) காலப்பகுதியில் ஆட்சி செய்தனர். அதாவது பிரித்தானியர் கால கல்விக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன என்றால் மிகையாகாது. இவர்களும் வர்த்தக நோக்கம் மற்றும் மதத்தினைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டதுடன் அதை நிறைவேற்றிக் கொள்ள கல்வியைக் கருவியாகப் பயன்படுத்தினர். பிரித்தானியர் கால ஆட்சியல் கலைத்திட்ட மாற்றங்கள் ஏற்பட்டது. அந்த வகையில் பிரித்தானியர் கால கலைத்திட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. பிரித்தானியர் கால கலைத்திட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பிரித்தானியர் கால கலைத்திட்டமானது அவர்களது கல்வித்துறை அணுகுமுறையானது நல்ல அமைப்பு கொண்ட கொண்டதாக அமைந்திருந்தது. அவர்களது கலைத்திட்ட அமைப்பு கிறிஸ்தவ சமயத்தினை சார்ந்ததாக அமைந்திருந்தது. அதாவது இவர்கள் கலைத்திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். அவையாவன 

  • கல்வி வளர்ச்சியில் ஆளுநர்களின் பங்கு 
  • கோல்புறூக் சீர்த்திருத்தம் 
  • மோர்கன் குழு 
  • கல்வி வளர்ச்சியில் சமயக்குழுக்களின் பங்கு

இவ்வாறான முறைகளில் கலைத்திட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பின்வருமாறு நோக்கலாம்.

கல்வி வளர்ச்சியில் ஆளுநர்களின் பங்கு 

பிரட்ரிக் நோர்த் அவர்களின் கல்விப்பணி :- 

இலங்கையில் இரட்டை ஆட்சிமுறை ஏற்படுத்தப்பட்ட பின்னர் பிரித்தானியர் சார்பில் 1798 பிரட்ரிக்நோர்த் நியமனம் பெற்றார். எனவே இவரது காலத்தில் கலைத்திட்டத்தில் ஆற்றிய பங்கை பின்வருமாறு நோக்கலாம்.

நோர்த் கிறிஸ்தவ சமயத்தை அடிப்படையாகக் கொண்டு கல்வியை புனரமைத்தார். 1797 இல் வருகை தந்த ஜேம்ஸ்கோடினருக்கும் 1803 இல் லண்டன் சமயக்குழுவும் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் நோர்த் கல்வி நடவடிக்கைகளை விரிவாக முன்னெடுத்தார். 

நோர்த் கல்வியின் அபிவிருத்தியின் பொருட்டு வறிய கிராமப்புற மக்களுக்கென பாடசாலைகளையும் சமூகத்தின உயர்ந்த பிரிவினருக்கு கல்வியை வழங்குவதெற்கென மேன்நிலை பாடசாலைகளையும் (அக்கடமி) நிறுவினார். 

கல்வி வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் அப்பணிகளுக்கு தகுதியானவர்கள் உள்ளூரிலே தெரிவு செய்ய ஆலோசனை வழங்கினார். 
அக்கடமியில் சிறந்து விளங்கும் மாணவர்களை தெரிவு செய்து இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் கல்வி பெற நோர்த் திட்டமிட்டார் 

சிங்கள, தமிழ் பிள்ளைகளுக்குரிய முதலாவது ஆங்கில பாடசாலையை 1799இல் இலங்கையில் வூல்பெண்டாவில் தொடங்கினார். இவ்வாறாக நோர்த அவர்கள் கலைத்திட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை அவதானிக்கலாம்.

தோமஸ் மெயிட்லர் அவர்களின் கல்விப்பணி :- 

1805 ஆம் ஆண்டு ஆள்பதவியாக பதவியேற்ற தோமஸ் மெயிடலர் 7 ஆண்டுகள் தேசாதிபதியாக பணியாற்றினார் இவரது ஆட்சி காலத்தில் கல்வித்துறையில் குறிப்பிடக் கூடியவாறான முன்னேற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும் அவர் சில கலைத்திட்டங்களை கொண்டு வந்தார். அவையாவன 

பாடசாலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. 

அக்கடமி புதுப்பிக்கப்பட்டு அங்கு பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. 

உள்ளூர் இளைஞர்கள் உயர்கல்விக்காக இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. போன்ற கலைத்திட்ட மாற்றங்களை தோமஸ் மெயிட்லர் மேற்கொண்டுள்ளார்.

ஆளுனர் றொபர்ட் பிறவுன்றிக் அவர்களின் கல்விப்பணி :- 

1812 இல் தேசாதிபதியாக பணிபுரிந்த றொபர்ட் பிறவுன்றிக் அவர்கள் கலைத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை திட்டமிட்டார். அந்த வகையில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைள் பின்வருமாறு 

கொழும்பு அத்தியட்ச குரு இவரால் உருவாக்ப்பட்டது. அதாவது நாட்டிலிருக்கும் அரசாங்க பாடசாலைகளை மேற்பார்வை செய்வதற்காக உருவாக்கப்பட்டது. 

கிறிஸ்தவ சமய போதனைகளை வழங்குவதற்காக நாட்டில் ஞாயிறு பாடசாலை முறை ஒன்றை உருவாக்கினார். 

வறிய பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கும் தர்ம பாடசாலைகளை உருவாக்கினார். 

ஆங்கிலக் கல்வியை நாட்டில் பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். 

தனியார் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு மாணவர்களிடம் கட்டணத்தை பெற்றுக் கொண்டு மதச்சார்பற்ற கல்வியை வழங்குவதற்கு திட்டமிட்டார். போன்ற திட்டங்களை கலைத்திட்டத்தில் கொண்டு வந்துள்ளமையை நோக்கலாம்.

மெக்கன்சி தேசாதிபதி அவர்களின் கல்விப்பணி :- 

மேற்குறிப்பிட்டவர்களை தொடர்ந்து வந்தவர்களில் ஆளுநர் மெக்கன்சி பிரதானமானவர் ஆவார். இதுவரை இயங்கி வந்த பாடசாலை ஆணைக்குழுமுறையை ஒழித்து மத்திய பாடசாலை ஆணைக்குழுவினை நிறுவி கல்விப்பணியை மேற்கொண்டார். 

சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் பாடநூல்களை மொழி பெயர்த்த ஒரு மொழி பெயர்ப்புக்குழவை நிறுவுதல். 

ஆசிரியர் பயிற்சிக்கென நியமப்பாடசாலைகளினை நிறுவுதல். 

நாடெங்கிலும் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிலுள்ள பாடசாலைகளை மேற்பார்வை செய்ய மேலதிகாரியை நியமித்தல். 

கொழும்பு அக்கடமியிலிருந்து இரு மாணவர்களை தெரிவு செய்து அரசாங்க செலவில் கல்கத்தாவிலிருந்த மேற்றிராணியார் கல்லூரியில் உயர்கல்வி கற்பதற்கு அனுப்புதல். 

பெண்கல்வி : ஆரம்பக்கல்வியை ஆங்கிலத்தில் வழங்கியதுடன் தையல் வேலைகள் கற்பிக்கப்பட்டன. 

ஆரம்ப பாடசாலை : கோயிற்பற்று பாடசாலைகளை போன்று சிறியவையாக காணப்பட்டன. மேலும் இங்கு கலைத்திட்டத்தில் ஆங்கிலம், கணிதம், வரலாறு, புவியியல், சமயம் போன்றவை இடம்பெற்றன. இப்பாடசாலைகள் ஆங்கிலக்கல்வி விருத்திக்கு வழிவகுத்தது. கலவன் பாடசாலை : இவை ஆண் பெண் கலப்பை குறிக்கவில்லை. மாறாக இங்கு ஆங்கிலமும் சுயமொழியுமே கற்பிக்கப்பட்டது. 

நியமபாடசாலைகள் :- ஆசிரியர் பயிற்சிக்கென இப்பாடசாலைகள் அமைக்கப்பட்டன. சுயமொழியில் பயிற்சி இடம்பெற்றமையால் சுதேச நியம பாடசாலைகள் சிங்கள ஆசிரியர்களை உருவாக்கின. 

சுயமொழி பாடசாலைகள் : நியம பாடசாலை மாணவர்கள் இங்கு ஆசிரியர்களாக பணியாற்றினர். இப்பாடசாலைகளில் எண்கணிதம், வரலாறு, புவியியல், எழுத்து, வாசிப்பு என்பன கலைத்திட்டமாக கொள்ளப்பட்டன. உதவி நன்கொடை முறை : அரச சார்பற்ற பாடசாலைகளுக்கு நன்கொடை வழங்கி கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் முறையை ஏற்படுத்தினர். 

உள்ளூர் பரீட்சைகள் : 1862 முதன்முதலாக மாணவர்களுக்கு உள்ளூர் பரீட்சையை மேற்கொண்டது. இவை மத்திய பாடசாலை ஆணைக்குழுவினாலே முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு மக்கன்சி தேசாதிபதியின் காலத்தில் கல்வி கலைத்திட்டத்தல் பாரிய மாற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்பட்டன.

கோல்புறூக் ஆணைக்கழு கல்வி தொடர்பாக கூறிய விதப்புரைகள் -1829 

கோல்புறூக் ஆணைக்குழு கல்வி தொடர்பான பல்வேறு விதப்புரைகளை கூறியது. அவையாவன 

மதகுருமாரும் இராஜதந்திரிகளும் இடம்பெறும் பள்ளி ஆணைக்குழு ஒன்று கல்விக்கு பொறுப்பாக நியம்pக்கப்பட வேண்டும். 

திருச்சபை பள்ளிகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் மற்றும் அரசுப்பள்ளிகள் விலக்கப்பட வேண்டும். 

விரைவில் பொதுத்துறைச் சேவை வாய்ப்பு கிடைக்கவுள்ள அரசபாடசாலைகள் யாவும் ஆங்கிலத்தில் சேவையாற்ற வேண்டும். மேலும் ஆசிரியர்களும் ஆங்கில அறிவு பெற்றிருக்க வேண்டும். 

ஆசிரியர்களுக்கு கல்விப் பயிற்சி புகட்ட பல்கலைக்கழக கல்லூரி போன்ற ஒருவகைக் கல்லூரியைத் தெடங்க வேண்டும் இவ்வாறான சிபாரிசுகள் இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி காலத்தில் கோல்புறூக் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டதை அவதானிக்கலாம்.

மோர்கன் குழுவின் அறிக்கை(1867) 

1865 இல் பாடசாலையின் பரிசோதகர் செண்டால் என்பவர் இங்குள்ள கல்வி முறையில் தெரிவித்த கண்டனங்களை தொடரந்து சேர் றிச்சட் குழு தலைமையில் மோர்கன் என்ற குழு நியமிக்கப்பட்டது. மோர்கன் குழுவின் கல்வி தொடர்பான விதப்புரைகள் பின்வருமாறு 

ஆளுநருக்குப் பொறுப்புடையவரான பணிப்பாளர் ஒருவர் தலைமையில் தினணக்களம் நிறுவப்படல் வேண்டும். இலவசக்கல்விக்காக சுதேச மொழிப்பள்ளிகள் நிறுவப்பட வேண்டும். 

முதலில் தாய்மொழியிலும் பின்னர் ஆங்கில மொழியிலும் கல்வி புகட்டும் கலப்பு (இருமொழி) பள்ளிகள் தொடங்கப்படல் வேண்டும். 

மத்திய பள்ளிகள் : நடைமுறைப் பிரயோக நோக்கு வழங்குவதன் மூலம் பாடசாலை ஆணைக்குழு நிறுவிய மத்திய பள்ளிகள் சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டும். 

மகளீர் கல்லூரிகள் : பெரிதும் அலங்காரங்கள் எனத் தக்க இவற்றின் கல்விநெறிகள் பயனுள்ளவையாக மாற்றியமைக்கப்பட வேண்டும். 

கொழும்பு கல்விக்கழகம் : இங்கிலாந்தில் உள்ள தனியார் பள்ளிகளை முன்மாதிரி கொண்ட நிலையமாக மறுசீரமைக்கப்பட்டு தொடரந்து பேணப்பட வேண்டும். 

இராணி கல்லூரி : கல்கத்தா பல்கலைக்கழகம் இணைக்கபபட்ட இராணி கல்லூரி தேவை எதனையும் பூர்த்தி செய்யவில்லை. ஆதலால் உயர் கல்விக்காக இங்கிலாந்துக்கு செல்ல ஆண்டு தோறும் இரு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட வேண்டும். 

கைத்தொழிற்பள்ளி ஒன்று நிறுவப்பட வேண்டும். 

ஆசிரியர் பயிற்சி : ஆங்கில ஆசிரியர்கள் கொழும்பு கல்விக்கழகத்திலும் சுதேச ஆசிரியர்கள் கைத்தொழில் பள்ளியிலும் ஆசிரியைகள் வகுப்பு மாணவர் தலைவியாகப் பாடசாலையிலும் பயிற்சி பெற வேண்டும். 

உதவி நன்கொடை முறைமை : நிதியுதவிக் கோரிக்கை விடுவிக்பபட்ட திருச்சபையினருக்கு உதவி நன்கொடை வழங்கும் ஒழுங்கு உருவாக்கப்பட்டது.

பிரித்தானியர் காலத்தில் சமயக்குழுக்களின் தாக்கத்தால் கலைத்திட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் கல்வி மிக வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் சமயக்குழுவினர் கல்வித்துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு போதிய வாய்ப்பு கிடைத்ததனை பயன்படுத்திக்கொண்டனர். தமது கிறிஸ்தவத்தை பரப்புவதற்கு கல்வியை ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டனர். இதன் பொருட்டு இலண்டன் சமய குழுவினர் வருகை தந்தனர். இவர்களின் நோக்கம் இலங்கையரின் பிள்ளைகளுக்கு அடிப்படை கல்வியையும் கிறிஸ்தவத்தையும் போதிப்பதாகும். பப்டிஸ் சமயக்குழு சிறியதாக காணப்பட்டதுடன் மிகக்குறுகிய காலத்திற்கே பணி புரிந்ததால் பாரியளவிலான கல்வி சார்ந்த நடவடிக்கைகளினை மேற்கொள்ளாது போனது. எனினும் ஏனைய குழுவினர்கள் வலிமையாகவும் அரச அனுசரணையும் நிதி வசதியும் காணப்பட்டதால் பாரிய அளவிலான பாடசாலைகளையும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டன. 

பிரித்தானியர்களின் வருகையின் முக்கிய நோக்கமாகிய கிறிஸ்த்தவத்தை பரப்புதல் மற்றும் வர்த்தக நோக்கம் என்பவை நிறைவேற்றும் பொருட்டு இவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இலங்கையின் கல்வி கலைத்திட்டத்தில் பாரியளவிலான மாற்றத்தினை ஏற்படுத்த காரணமாகியது. ஏனைய அந்நியவர்களுடன் ஒப்பிடுகையில் இன்று வரையிலான கல்வி கலைத்திட்டத்தில் தாக்கம் செலுத்தும் வகையிலான மாற்றங்களை பிரித்தானியர்களின் காலமானது மேற்கொண்டுள்ளது.




Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)