Impacts of Globalization (Tamil)

 உலகமயமாதலின் விளைவுகள்

அறிமுகம்

உலகமயமாதல் என்ற சொல் 1980-ல் சேர்க்கப்பட்டது. அதற்கு முன்பாகவே, பல நாடுகளில் இது பற்றிய கருத்து இருந்தது. இது வாழ்க்கையின் அனைத்து கோணங்களிலும் பொருளாதாரம், கல்வி, நுட்பவியல், கலாச்சாரம், சமூகம் என அனைத்தையும் இன்றைய நவீன நாகரீக நாட்களில் உலகமயமாதல் தொட்டு விட்டது. “உலக கிராமம் எப்போதுமே உலகமயமாதலை முன்னிலைப் படுத்தும்”;. மேலும் உலகத்தை மின்னுணு தொடர்புடன் இணைக்கும் புரட்சியை இவ்வார்த்தை குறிக்கிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, உலகமயமாதல் நடப்புப்போக்காய் மட்டுமல்லாமல் எதிர் கால உலக அமைப்பாய் மாறும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

வளர்ந்து வரும் நாடுகளில் உலகமயமாதலின் நேர்மறையான விளைவுகள்

1. தொழில் நுட்பத்தில் அடைவு

உலகமயமாதலால் தொழில் நுட்பத்தை அடைவதில் கடுமையான போட்டி வளர்ந்து வருகிறது. அறிவைப் பெற உலக முழுவதும் இணைய வசதி சேவை அளிக்கப்படுகின்றன. மற்ற நாடுகளுடன் தொடர்பு கொள்வதற்கு தொலைபேசியின் புரட்சியால் பயன் அடைந்துள்ளோம்.

2. சர்வதேச வர்த்தகத்தின் வளர்ச்சி

கட்டணத் தடைகள் விலகியதால் தேசங்களுக்கு இடையேயான வர்த்;தகங்கள் வளர்ந்தன. இது சர்வதேச வர்த்தகத்தினால் (General Agreement on Service and Trade, World Trade Organization) எளிதாக்கப்பட்டது.

3. உற்பத்தியில் உயர்வு

பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்வது உலகமயமாதலால் அதிகரித்துள்ளதன் விளைவாக உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உலகம் முழுவதும் (Multi National Company) நிறுவியதால் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

4. வெளிநாட்டு மூலதனத்திற்கான இலவச ஓட்டம்

வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை அதிகரிக்க உலகமயமாதலின் இலவச ஓட்ட மூலதனத்தை (Free flow of foreign Capital) ஊக்கப்படுத்த வேண்டும். இது மூலதன உற்பத்தியை அதிகரிக்கும்.

உலகமயமாதலாலின் எதிர்மறையான விளைவுகள் 

1. நாடுகளிடையே சமநிலை இல்லாதது 

உலக நாடுகளிடையே சமநிலையற்ற தன்மையை உலகமயமாதல் அதிகரித்துள்ளது. சில உலகமயமாதல் கோட்பாடுகள் வளர்ந்த நாடுகளுக்கு அதிக நன்மையை அளிக்கின்றன.  இலவச வர்த்தக நிரலை கொண்டுள்ள நாடுகள் அதிக வெற்றியை அடைந்துள்ளன.  உதாரணமாக, உலகமயமாதலால் சீனா வெற்றி கண்டுள்ளது. ஆனால், இலங்கை, இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகள் இப்பிரச்சனைகளிலிருந்து வெளிவருவது கடினமாக உள்ளது.  

2. நிலையற்ற நிதித்தன்மை

உலகமயமாதலின் விளைவால் வளர்ந்து வரும் நாடுகளில் வெளிநாட்டு மூலதனத்தின் இலவச ஓட்டம் ஊக்கப்படுத்தப்படுகிறது. இதனால் பொருளாதாரம் ஏற்ற இறக்கத்தை கொண்டுள்ளது. மேலும் வெளிநாட்டு இலவச மூலதனங்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

3. தொழிலாளிகளின் மீதான தாக்கம்

உலகமயமாதலால் வேலை வாய்ப்பு திறந்த நிலையில் உள்ளது. ஆனால் தொழிலாளர்களுக்கு வேலைப் பாதுகாப்பு இல்லை. இது வேலையாட்களின் மீது வேலையின் தன்மை மூலமாக புதிய அழுத்தங்களை உருவாக்கியுள்ளது. இதன் வழக்கமான வேலையாக உள்ளது. மேலும் அவர்கள் வர்த்தக தொழிற்சங்கங்கள் உருவாக்குவதை அனுமதிப்பதில்லை.

4. விவசாயிகளின் மீதான தாக்கம்

உலக சந்தைகளில் விவசாயிகள் பெரும் அச்சுறுத்தல்களை சந்திக்கின்றனர். மேலும் இவர்கள்; வளர்ந்த நாடுகளின் விவசாயப் பொருட்களை குறைவான விலைக்கு  இறக்குமதி செய்வதால் சக்தி வாய்ந்த விவசாய நிறுவனங்களுடன் கடுமையான போட்டியை சந்திக்கின்றனர்.  

5. சுற்றுச் சூழலின் மீதான தாக்கம்

உலகமயமாதல் உலக வர்த்தகத்தின் 50% உயர்வுக்கு காரணமாக உள்ளது. பெருமளவிலான பொருட்களை உலகம் முழுவதும் கொண்டு செல்வதால் அதிகமான புகை வெளியேற்றப்படுகிறது. உலக வங்கியால் நிதியுதவி அளிக்கப்படும் திட்டங்கள் சில சுற்று சூழல் சம நிலைக்கு பேரழிவை ஏற்படுத்துவதாக உள்ளன. 

6. பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம்

உலகமயமாதலில் பன்னாட்டு நிறுவனங்கள் (Multi National Company) ஒரு உந்து சக்தியாக உள்ளது. அவர்கள் கட்டளையிடும் அதிகார நிலையில் உள்ளனர். பன்னாட்டு நிறுவனங்கள் வலிமையான வர்த்தக சக்தியாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அந்நாடுகளில் உள்ள இயற்கை வளங்களையும் மலிவான வேலையாட்களையும் சுரண்டுகின்றன.

7. தேசிய இறையாண்மைக்கான அச்சுறுத்தல்

உலகமயமாதலாலின் காரணமாகஇ சில தற்சார்பு நாடுகள் தங்களது பொருளாதார சக்தியை சர்வதேச நிறுவனங்களான ஐ.நா.சபை (United Nations), உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organization) போன்ற உலக அமைப்புகளுடன் மாற்றி அமைத்துள்ளன. இதன் கொள்கைகள் உலகமயமாதலுக்கு சாதகமாக உள்ளன. பீட்டர் டிரக்கர் கூற்றுப்படி, உலகமயமாதல் வர்த்தகம் செய்யும்; வழியை நல்ல விதமாகவோ அல்லது மோசமான விதமாகவோ மாற்றி உள்;ளது. இது நிறுத்த முடியாதது. எனவே உலகமயமாதல் என்பது தவிர்க்க முடியாதது. இதன் காரணமாக இலங்கை அனைத்துத் துறைகளிலும் உலகளாவிய போட்டியோடு இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


உலகமயமாதலின் உடனடி விளைவே தாரளமயமாதல் என்பதாகும். இது தடையில்லா கட்டுப்பாடற்ற வர்த்தகத்தைக் குறிக்கின்றது. உலகமயமாதலின் காரணமாக தாரளமயமாதல், இன்று ஒரு கட்டாயமாக மாறி வருகிறது. தனியார்மயம் என்பது பொதுத் துறைகளின் நிர்வாகத்தை தனியாருக்கோ, நிறுவனங்களுக்கோ முதலாளிகளுக்கோ அளிப்பதாகும். இதன் காரணமாக சர்வதேச நிதி அமைப்பு (International Monetary Fund) நடைமுறைப்படுத்தும் கட்டமைப்பு சார்ந்து ஒத்துப் போதல் திட்டம் தவிர்க்க இயலாதது.

தனியார்மயமாதலின் நோக்கங்கள்

  • தனியார் துறையை வலுப்படுத்துதல்.  
  • உள் கட்டமைப்பு கல்வி போன்றவற்றில் அரசு கவனம் செலுத்துதல். 
  • உலகமயமாதலில், அரசின் பொதுத் துறைகளில் திறமையின்மை அதிகரிக்கும் போது உலக அளவிலான சாதனை நிகழ்த்த முடிவதில்லை. இதனால் பொதுத் துறைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு எடுக்கப்படுகின்றன. 
பொதுத் துறையின் திறனின்மைக்கான காரணங்கள்
  • அதிகாரத்துவ நிர்வாகம்  
  • பழைய தொழில் நுட்பம்  
  • ஊழல் 
  • பொறுப்பின்மை 
  • தொழிற் சங்கத்தின் ஆதிக்கம் 
  • அரசியல் குறுக்கீடு  
  • ஒழுங்கான வர்த்தக செயலின்மை
தனியார்மயமாதலின் நன்மைகள் 
  • திறன் 
  • அரசியல் குறுக்கீடின்மை 
  • தரமான சேவை
  • முறையான விற்பனை  
  • நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல் 
  • பொறுப்புணர்வு 
  • போட்டிக்குரிய சூழல்; உருவாதல் 
  • கண்டு பிடிப்புகள் 
  • ஆராய்ச்சி வளர்ச்சி 
  • வளங்களின் சிறப்பான பயன்பாடு 
  • உள்கட்டமைப்பு வளர்ச்சி
தனியார்மயமாதலின் குறைபாடுகள் 
  • வேலையாட்களிடம் சுரண்டல் 
  • நிர்வாகிகள் தவறாக அதிகாரத்தைப் பயன்படுத்துதல் 
  • செல்வம் வருவாயை சமமற்ற முறையில் பங்கிடுதல் 
  • வேலையாட்களுக்கு வேலை பாதுகாப்பின்மை 
  • தற்போதைய சூழ்நிலையில் தனியார்மயமாதல் தவிர்க்க முடியாதது. ஆனால், சில கட்டுப்பாடுகளை அரசு தனியார் துறை மீது விதிக்க முடியும்.  
உலகமயமாதலின் தாக்கங்களின் விளைவாகத் தனியார்மயப்படுத்தலை நோக்கி கல்வி நிறுவனங்கள் காலப்போக்கில் நகர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிப்பதை அவதானிக்க முடிவதோடு சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் ஊடுருவல் தவிர்க்க முடியாததாகவும் காணப்படுகின்றது.




Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)